செயற்கைக் கோள்கள் உண்மையாகவே
உள்ளனவா?
அறிவியலில் காணப்படும் பிழைகளை ஒன்றொன்றாக
நான் கற்றுக் கொள்ள ஆரம்பித்தக் காலத்தில் எனக்கு இரண்டாவதாககச் சந்தேகம் எழுந்தது,
தகவல் தொழில் நுட்பப் பிரிவில் தான். ஆம், நான் தகவல் தொழில் நுட்பம் கற்றவன் அல்ல.
ஆனால் எனக்கு செயற்கைக் கோள்கள் நிஜமாகவே இருக்கின்றனவா? என்ற சந்தேகம் எழுந்தது. நான்
ஒரு நாள் எதேச்சையாக வலைதளத்தில் தேடிக் கொண்டிருந்த போது நான் கண்ட ஒரு விஷயம் என்னை
பிரம்மிக்க வைத்தது. செயற்கைக் கோள்களைப் பற்றிய என் சந்தேகம் எனக்கு மட்டும் எழவில்லை,
உலகில் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்த வெவ்வேறு மனிதர்களுக்கும் எழுந்துள்ளது என்பது
தான். பல பேர் யூ டியூப் என்னும் தொலைக்காட்சி வலைத்தளத்தில் காணொளிகள் மூலம் தங்கள்
கருத்துக்களைக் கூறியிருந்தனர். அவர்கள் அறிவியல் அடிப்படையில் மிகத் தெளிவான விளக்கங்களை
அளிக்கவில்லை. நான் அதற்கு அறிவியல் அடிப்படையிலான ஒரு விளக்கத்தைப் பெற முயன்றேன்.
வளிமண்டலத்தின் 5 அடுக்குகள் பற்றி நம்மில்
பலரும் அறிந்ததே! அதில் மிகவும் வெப்பம் நிறைந்தப் பகுதி “வெப்பஅடுக்கு” இதை ஆங்கிலத்தில்
“thermo sphere” என்று அழைப்பர். அந்த அடுக்கில் தான் செயற்கைக் கோள்கள் இருப்பதாக
அறிவியலாளர்கள் கூறுவர். அது புவியிலிருந்து சுமார் 690 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளப்
பகுதியாகும். அதற்கு வெப்ப அடுக்கு என்ற பெயர் வைத்தக் காரணமே சூரியனின் அதிகபட்ச வெப்ப
நிலையை அந்த அடுக்கில் உள்ள எந்த ஒரு பொருளும் முழுவதுமாக கதிர் வீச்சு எனப்படும் வெப்ப
பரிமாற்ற முறையில் உட்கிரகித்து விடும் என்பதால் தான். இந்த நிலையில் அங்கு இருக்கும்
செயற்கைக் கோள்கள் குறைந்தது 25000 C வெப்ப நிலையையாவது உட்கிரகித்திருக்க
வேண்டும். இவ்வளவு அதிகமான வெப்ப நிலையில் செயற்கைக் கோள்களில் உபயோகிக்கக் கூடிய டைட்டானியம்
மற்றும் அலுமினியம் கலந்த கலவையினாலான உலோகம் கண்டிப்பாக உருகி விடும் (கலவையின் உருகு
நிலை சுமார் 17000 C மட்டுமே). மேலும் பல உலோகக் கலவைகள் இருந்தாலும் கூட
வெப்ப அடுக்கில் இருக்கும் அந்த வெப்ப நிலையைத் தாங்கும் அளவுக்கு இல்லை என்பது தான்
உண்மை. இங்கு செயற்கைக் கோள்கள் உருகிய நிலையில் தான் காணப்பட வேண்டும். இவற்றை நான்
மிக நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டறிந்தேன். பலரிடம் இது பற்றி விவரித்தேன். ஏனெனில்
பல மில்லியன் பணம் இவற்றிற்காக செலவிடப் படுகின்றன. இந்த நிலையில் அது உண்மையா? என்ற
ஒரு கேள்வி எழும் போது என்னை யோசிக்க வைத்தது. மேலும் இந்தப் புவியில் பசியால் பல கோடி
மக்கள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில். அடுத்தக் கிரகத்தில் என்ன இருக்கிறது
என்று அறிய முற்படுவது அவசியமான ஒன்றா? என்ற கேள்வி எழுந்தது. நீங்களே சிந்தித்துப்
பாருங்கள். என் இந்தத் தேடல் மேலும் பல அதிர்ச்சியான தகவல்களுக்குள் என்னை இழுத்துச்
சென்றது. அவற்றை என் பின் வரும் கட்டுரைகளில் விவரிக்கிறேன்.
நம் இளைஞர்கள் மத்தியில் நான் கண்ட மேலும்
ஒரு பொல்லாத ஆளுகை போதைப் பழக்கம். என் கல்லூரியில் சென்ற வாரத்தில் ஒரு மாணவன் இந்த
போதைப் பழக்கத்தால் இறந்து போனான். மிகவும் வேதனையான உண்மை. போதையில் இருக்கும் போது
வாகனம் ஓட்டிக் கட்டுப் பாட்டை இழந்து இறுதியில் உயிரைப் பறிக்கும் ஒரு விபத்தாகப்
போய் முடிந்திருந்தது. இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்து இருக்கிறது. இன்றைய மாணவர்கள்
தன் போதைப் பழக்கத்தை மிகவும் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். இதில் பெருமைப் பட
என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. போதைப் பழக்கம் ஏதோ ஒரு வகையில் உயிரைப்
பறிக்கும் வல்லமை வாய்ந்தது. இவை கடவுளுக்கும் எதிரான ஒரு செயல் ஆகும். இவற்றை மாற்று
மார்க்கங்களைப் பின்பற்றும் மற்றும் நாத்திகம் பேசித் திரியும் இளைஞர்களுக்கு நாம்
எவ்வாறு புரிய வைப்பது என்றுப் புரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒரே வழி அவர்களுக்காக
ஜெபிப்பது மட்டும் தான். என்னுடைய வேண்டுகோள் ஒன்று உண்டு. நீங்களும் இந்த இளைஞர்களுக்காக
ஜெபிப்பீர்களா?
வாழ்க
இயேசு நாமம்!!
No comments:
Post a Comment